சுவசெரிய சேவையை உலக வங்கியானது உலகின் முன்னணி ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளது,
சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையானது உலகில் வேகமாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக மாறியுள்ளதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரேசர், தெற்காசியாவில் வறுமையை ஒழித்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் உலக வங்கியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சுவசெரியகுறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டு நாட்டில் சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், 1990 ஆம் ஆண்டு முதல் 1.8 மில்லியன் இலங்கையர்கள் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அழைப்பு வந்த 12 நிமிடங்களில் உதவி தேவைப்படுவோரை அருகிலுள்ள மருத்துவமனை அல்லது பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்ல சுவசெரிய உதவியுள்ளது
அந்த அறிக்கையின்படி, உலக வங்கியானது உலகின் மிக வேகமாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவைகளில் ஒன்றாக சுவசெரியவை பெயரிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் சிறப்புச் சட்டத்தின் மூலம் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையானது ஒரு சுயாதீனமான தனியார் அமைப்பாக நிறுவப்பட்ட பின்னர் மிகவும் திறமையானதாக உலக வங்கி அறிக்கை காட்டுகிறது.
தெற்காசியாவில் ஒரு புரட்சிகர டிஜிட்டல் ஹெல்த் மற்றும் எமர்ஜென்சி சேவை திட்டமான சுவசெரியவளரும் நாடுகளில் முன்னோடியாக இருப்பதாகவும் உலக வங்கி குறிப்பிடுகிறது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…