ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான உக்ரைனின் தாக்குதல்களை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 0.9 சதவீத உயர்வை பதிவு செய்து 83.47 அமெரிக்க டொலராக காணப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் இந்த அளவில் விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அத்துடன் ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 0.6 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 87.38 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் கனியவள உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை உக்ரைன் விரைவுபடுத்தியுள்ளது.
ரஷ்யாவின் 7 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைத்து உக்ரைன் ஆளில்லா விமான கருவி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…