Categories: Sports News

இலங்கை அணி வீரரை கேளி செய்த பங்களாதேஷ் வீரர்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்றுதன் மூலம் பங்காளதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டி நேற்றையதினம் சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையில் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதன்படி, துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அணைத்து விக்கெடுகளை இழந்து 235 ஓட்டங்களை எடுத்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அட்டமிழக்காமல் ஜனித் லியனகே 101 ஓட்டங்களை பெற்றார்.

இதனை ஆடுத்து 236 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டுமே இழந்து 236 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் தன்சித் ஹசன் 84 ஓட்டங்களையும், ரிஷாத் ஹொசைன் 48 ஓட்டங்களை பெற்றனர்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஏஞ்சலோ மேத்திஸின் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி செய்யும் விதத்தில் பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் நடித்து காட்டியிருந்தார்.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago