Categories: Local News

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஆசிய அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிதித்துறை நிபுணர் மனோஹரி குணவர்தன அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கடன் தொகையில், 50 மில்லியன் அமெரிக்க டொலர், ஏற்றுமதி, சுற்றுலா, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள பின்னடைவை சந்தித்துள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த நிறுவனங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

குறித்த நிறுவனங்களில் 45 சதவீத பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

எனவே, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு, பொருளாதாரத்தில் தமது துறையின் பங்களிப்பை நிலைநிறுத்தவும் அபிவிருத்தியடையவும் தேவையான ஆதரவை வழங்குவது அவசியமானதாகும்.

அதன்படி, இந்த திட்டம் செயல்பாட்டு மூலதனத்தை வழங்குவதுடன், தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கும் உதவும்.

இதற்காக பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான உத்தரவாத மானியங்களை ஈடுகட்டுவதற்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர் விசேட வசதியையும் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago