பங்களாதேஷுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலையும் அதன் பணியாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொசாம்பிக் தலைநகர் மபுடோ துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணித்த ‘எம்.வி. அப்துல்லா’ என்ற கப்பல் நேற்று காலை கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 55,000 தொன் நிலக்கரி ஏற்றப்பட்ட கப்பலை கடத்திய பின்னர், 23 பேர் கொண்ட அதன் பணியாளர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்தியப் பெருங்கடலில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் உள்ள சோமாலியாவின் தலைநகரான மொகடிஷூவின் கிழக்கே கடற்பரப்பில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட குழுவினர் அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…