Categories: Local News

உதவி ஆசிரியர் நியமனம் குறித்து வெளியான அறிவிப்பு

மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் நியமனங்களை எதிர்வரும் 19ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இன்று (14) தன்னிடம் உறுதிப்படுத்தியதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

நுவலெரியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (14) நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, அவர்கள் உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தான் கடந்த வாரம் பாராளுமன்றத்திலும் குறல் எழுப்பியதாகவும் தெரிவித்தேன்.

இதன்போது இந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இந்த நியமனங்களை எதிர்வருகின்ற 19 ஆம் திகதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்;பட்டிருப்பதாகவும் அதனை நிச்சயமாக குறித்த திகதியில் வழங்க முடியும் என்பதையும் அவர் அங்கு தெரிவித்தார்.

இந்த ஆசிரியர்கள் 2016 ஆம் ஆண்டு உதவி ஆசிரியர்களாக நியமனம் பெற்று 2019 ஆம் ஆண்டு அவர்கள் தங்களுடைய தகுதியை ஆசிரியர்களாக பூர்த்தி செய்திருந்த போதிலும் அவர்களுக்கான நியமனம் பல காரணங்களால் கடந்த 5 வருடங்களாக வழங்கப்படாமல் இருக்கின்றது.

இன்றைய பொருளாதார நிலைமையில் ஆசிரிய உதவியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே தங்களுடைய தொழிலையும் வாழவாதாரத்தையும் முன்னெடுத்து வருகின்றார்கள் எனவே அவர்களுடைய நியமனத்தை உடனடியாக வழங்கி அவர்கள் தங்களுடைய தொழிலை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விடயத்தை தெரிவித்த பொழுதே மாகாண கல்வி அமைச்சர் எதிர்வரும் 19 ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணள் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை உறுதி செய்து கொள்ளும் முகமாக இது தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago