Categories: International News

ரமழான் நோன்பின் போது சாப்பிட்ட 11 பேர் கைது

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவில் ரமழான் நோன்பின் போது உணவு உண்ட குற்றச்சாட்டில் 11 இஸ்லாமியர்களை அந்த நாட்டின் இஸ்லாமிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கானோவில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வசித்து வருகின்ற நிலையில், அங்கு பொதுவான மதச்சார்பற்ற சட்டத்துடன், இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டமும் அமுல்படுத்தப்படுகிறது.

ஹிஸ்பா என பரவலாக அறியப்படும் இஸ்லாமிய பொலிஸ், ஒவ்வொரு ஆண்டும் ரமழான் காலப்பகுதியின் போது உணவகங்கள் மற்றும் சந்தைகளில் சோதனைகளை மேற்கொள்கிறது.

அவ்வாறே, நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 10 ஆண்களும் ஒரு பெண்ணுமாக நோன்பு கடைபிடிக்க வேண்டிய காலப்பகுதியில் உணவு உண்ட குற்றச்சாட்டில் கைதாகினர்.

எவ்வாறாயினும், வேண்டுமென்றே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தவறவிட மாட்டோம் என அவர்கள் சத்தியம் செய்த பின்னர் விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் எனவும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்கள் நோன்பு இருக்க வேண்டிய முஸ்லிம்களுக்கு உணவு சமைப்பது உறுதிசெய்யப்படுமானால் அவர்களும் கைதுசெய்யப்படுவார்கள் என நைஜீரியாவின் இஸ்லாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago