Categories: International News

நடுவானில் பறந்த விமானம் – குட்டி தூக்கம் போட்ட விமானிகள்

இந்தோனேஷியாவின் பாடிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் திடீரென்று தடுமாற்றத்துடன் வானில் பறந்துள்ளது.

ஜகார்தாவுக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி பயணித்த பாடிக் ஏர்பிளைட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் 153 பயணிகளும் இரண்டு விமானிகள் மற்றும் 4 விமான பணியாளர்களும் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது வழக்கமான பாதையை விட்டு விலகி சென்றுள்ளது.

இதனால், விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் விமானிகள் இருவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

சுமார் 35 நிமிடங்கள் இந்த பரபரப்பு நீடித்தது. அதன்பிறகு விமானம் வழக்கமான பாதைக்கு வந்து தனது பயணத்தை தொடங்கியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், குறித்த நேரத்தில் விமானிகள் இருவருமே தூங்கியமை தெரியவந்துள்ளது

குறித்த விமானத்தில் 32 மற்றும் 28 வயது மதிக்கத்தக்க இரண்டு விமானிகள் சேவையில் இருந்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் இணை விமானியிடம் கட்டளை விமானி, தனக்கு உறக்கம் அதிகமாக வருவதாக கூறி உறங்கியிருக்கிறார்.

ஆனால், சிறிது நேரத்தில் இணை விமானியும் தன்னை அறியாமல் தூங்கிவிட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை விமானம் சரியான நேரத்தில் வந்து தரையிறங்கியுள்ளது.

எனினும், விமானிகளின் இந்த அஜாக்கிரதையான செயல் விமான பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago