திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தனவெட்டை எனும் கிராமத்தில் செடார் நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஓர் கட்ட நிகழ்வாக “சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் வீதியோர நாடகம் மூதூர் சேனையூர் மத்திய கல்லூரி மாணவர்களால் நேற்றைய தினம் (08) சனிக்கிழமையன்று சந்தனவெட்டை கிராம பிரதான வீதியில் நடைபெற்றது.
இவ்விதியோர நாடகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடனும், பிரிட்டிஷ் கவுன்சிலின் அனுசரனையுடனும் முஸ்லிம் எயிட்ன் வழிகாட்டலுடன் மூதூர் நல்லிணக்கத்திற்கான இளைஞர் குரல் எனும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் மூன்று சமூகங்களில் காணப்படும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு அவற்றினூடாக எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பான ஒரு நாடகமாகவே இடம்பெற்றது. அது மட்டுமன்றி விஷேட தேவையுடையேர்களை எவ்வாறு கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்பது தொடர்பாகவும், நேற்றைய தினம் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை கௌரவிக்கும் முகமாகவும் இந்நாடகம் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்நிகழ்வில் முஸ்லிம் எயிட்டின் திருகோணமலை மாவாட்ட ஒருங்கிணைப்பாளரான சலீம், முஸ்லிம் எயிட்டின் திட்ட முகாமையாளர் அருண், செடார் ஆக்டிவ் சிட்டிசன் வழிகாட்டி மதுஷாலினி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…