நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் ஏமாற்றுப் பேர்வழிகளின் செயல்களும் அதிகரித்துக்கொண்டே காணப்படுகின்றது.
அண்மைக்காலமாக பேஸ்புக்கின் மேசஞ்சரில் (Messenger) தொடர்புகொள்ளும் சில ஹக்கர்களின் ஏமாற்று வித்தை அரங்கேறி வருகின்றது.
இவ்வாறான ஹக்கர்கள் பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து மேசஞ்சர் ஊடாக குறித்து நபரின் மேசஞ்சருக்கு தொடர்புகொள்கின்றார்.
பேஸ்புக்கை ஹக்செய்து அவர்களுக்குப் பரீட்சயமான நண்பர்களின் போலி கணக்குகள் ஊடாக மேசஞ்சரில் தொடர்புகொண்டு அவர்களை ஒரு குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் எனவும் கேட்கிறார்கள். அதைத் தொடர்ந்து குழுவில் இணைக்க ஒரு OTP வந்திருக்கும் என்று கேட்பார்கள். அதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் திருடிவிடுவார்கள்.
இவ்வாறு தான் மெசஞ்சர் மூலம் தொடர்பு கொள்கின்றனர்,
“ Hello I’m contesting for an ambassadorship spot at an online Facebook access program can you pls vote for me ” இவ்வாறு தொடர்புகளை ஏற்படுத்துகின்றனர்.
நாம் பதில்களை வழங்கும் போது பின்னர்
“ You have to send me your number so I can add you to the voting group” இவ்வாறு பதிலனுப்புகின்றனர்.
இவ்வாறான கேள்விகளுக்கு நீங்கள் பதிலனுப்பும் போது உங்களது வங்கிக்கணக்கு உள்ளிட்ட ஏனைய தனிப்பட்ட தரவுகள் ஹக் செய்யப்பட்டுவிடும்.
பின்னர் ஹக்செய்யப்படும் பேஸ்புக் கணக்குகள் அவர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றப்பட்டு ஏனையவர்களை நம்பும் படி இவ்வாறு இணைத்துவிடுவார்கள்.
எனவே இணையத்தில் எப்போதும் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள். அத்துடன் உடனடியாக தீர்மானம் எடுத்து உங்களது தனிப்பட்ட தரவுகளை வழங்கி விடாதீர்கள். முதலில் தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள்.
இவ்வாறான ஹக்கர்கள் தொடர்பில் பேஸ்புக்கில் முறையிடுவதற்கான வழிகள் உள்ளன. முறையிட்டு Block செய்யுங்கள்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…