Categories: Local News

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் – கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

அவசரமாக நிரப்ப வேண்டிய வெற்றிடங்களுக்கு ஒன்பது மாகாணங்களிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பரீட்சைகளில் தோற்றி புள்ளிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு புள்ளிகளின் அடிப்படையில், நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் சபையில்

தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் எம்பி ஜயந்த சமரவீர, மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மாகாண ஆளுநர்களுடன் நேற்று முன்தினம் காலையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன். அத்துடன் நேற்று காலை சகல மாகாணங்களிலுமுள்ள கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன், சூம் தொழில்நுட்பம் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவாக மேற்கொள்ள வேண்டிய ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புள்ளிகளின் அடிப்படையில் தெரிவானவர்கள் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவர்.

ஜயந்த சமரவீர எம்பி தமது கேள்வியின் போது,

மேல் மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பரீட்சை நடத்தப்பட்டது. அதனையடுத்து நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டது. சமகாலத்தில் செயன்முறை பரீட்சையும் நடத்தப்பட்டது. 5350 பேர் இதற்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 2500 பேருக்கு மட்டுமே இதுவரை நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மேல் மாகாணத்தில் 5305 ஆசிரிய பெற்றிடங்கள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், மீதமானவர்களுக்கு எப்போது நியமனம் வழங்கப்படும் என்பதை கல்வியமைச்சர் சபையில் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளித்தபோதே நியமனங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago