Categories: Local News

அலி சப்ரி ரஹீமின் கட்சி உறுப்புரிமை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

தமது கட்சி உறுப்புரிமையை நீக்கி அதன்மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணை கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவருக்கு எதிராக சாதாரண ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுப்பதற்கு கட்சிக்கு எவ்வித தடையும் இல்லை என நீதவான் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த மனுமீதான விசாரணையை எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி மீள எடுத்துக்கொள்வதற்கு நீதவான் தீர்மானித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சட்டவிரோதமான முறையில் பெருமளவான தங்கம் மற்றும் தொலைபேசிகளை நாட்டிற்கு கடத்திய நிலையில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, தம்மை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையினை கட்சியின் நிர்வாகத்தினர் எடுத்துள்ளதுடன், அதனை வலுவிழக்க செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மனுவில் கோரியிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago