அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக மாணவர்களுக்கான தாக்கத்தை குறைக்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் புதிய ஆலோசனை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, கல்வி அமைச்சு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நாட்களில் அவசியமான அலுவல்கள் தவிர்ந்த பிற செயற்பாடுகளுக்காக மாணவர்களை வீடுகளிலிருந்து அல்லது பாடசாலையிலிருந்து வெளியே அனுப்புவதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக வெப்பநிலை நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும், அவர்கள் ஓய்வெடுப்பதற்காக குறைந்தபட்சம் இரண்டு குறுகிய நேர இடைவேளைகளை வழங்குவது பொருத்தமானதாகும் எனவும் கல்வி அமைச்சின் வழிகாட்டுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் கழுத்துப்பட்டி அணிவதை தவிர்க்க முடியும் என்பதுடன், தகரங்களினால் அமைந்த கட்டடங்களில் இருந்து தற்காலிகமாக மாணவர்களை ஏனைய பொருத்தமான கட்டடங்களுக்கும் அனுமதித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து வலய கல்வி பணிப்பாளர்களின் ஊடாக சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…