உத்திக பிரேமரத்ன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பி அவர் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
நாட்டில் குறிப்பிடத்தக்க நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடனேயே தாம் 2020 =ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலின் ஊடாக அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனது அனைத்து எதிர்பார்ப்புகளும் பொய்யாக்கப்படும் வகையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தொடர் சம்பவங்களின் போது, இளம் தலைவர் என்ற வகையில் செயற்படுவதற்கு தனக்கு எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை என அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக தான் தற்காலிகமாக அதிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக உத்திக பிரேமரத்ன சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…