நாட்டில் சில பகுதிகளில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவை குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள கங்கையில் நிர்வாணமாக காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளது . இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை .
பேலியகொட 4 ஆம் மைல் கல்லுக்கு அருகில் பட்டியசந்தி பகுதியில் ரயிலால் மோதுண்டு உயிரிழந்த 35 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . இவர் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான சட்டை மற்றும் கறுப்பு நிறத்திலான காற்சட்டை அணிந்திருந்துள்ளார் . வலது கையில் பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
மாரவில பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 55 முதல் 60 வயதுடைய ஆண் ஒருவராவார்.
ராகமை – கடவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இவர் சாம்பர் நிற புடவை மற்றும் கறுப்பு கை சட்டை அணிந்திருந்துள்ளார் . உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…