போலியான விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள், வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஒருவருமென தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள், விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இவ்வாறு கைதாகியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கட்டாரின் டோஹாவுக்கு சென்று டோஹாவிலிருந்து, பிரான்சின் பாரிஸுக்குச் சென்று இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரை அடைவதற்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், ஆவண பரிசோதனை நடவடிக்கைகளின்போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…