இந்நாட்களில் நிலவும் வரட்சியான காலநிலை உடலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பகலில் நிழலில் தங்கி முடிந்தளவு தண்ணீர் அருந்துமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேமா வீரகோன் தெரிவித்தார்.
குறிப்பாக வெயிலில் பயணம் செய்தால் ஹெல்மெட் அல்லது குடையை பயன்படுத்தவும், அத்தியாவசிய பணியாக இருந்தால் சன் கிரீம் பயன்படுத்தவும் அறிவுறுத்துகிறார்.
வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்றவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது உடலுக்கு நல்லது என்று குறிப்பிடும் கலாநிதி ஹேமா வீரகோன், நாளொன்றுக்கு அதிகளவு தண்ணீர் அருந்துவது அவசியம் என்றும் கூறுகிறார்.
இந்த நாட்களில் விளையாட்டுகளின் போது குழந்தைகளை கடுமையான வெயிலில் வெளிப்படுத்துவது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதால், குழந்தைகளை கடுமையான வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது நிலவும் வரட்சியுடனான சூடான காலநிலை காரணமாக தோல் நோய்களும் பரவி வருவதால், சூரிய ஒளியை மறைப்பதற்கு சன் கிரீம் பயன்படுத்துமாறும் கூறியுள்ளார். மேலும், மேலும் இந்த காலநிலையில் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுவதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் அதிகப்படியான மாசுபாட்டால் ஓசோன் படலம் அழிந்துவிட்டதால் கதிர்கள் நேரடியாக உடலில் விழுவதே இந்த நிலைக்கு காரணம் என்று அவர் கூறினார்.
பகலில் சூரிய ஒளி படுவதால் மரணம் கூட ஏற்படலாம் என்பதால், அத்தியாவசிய விஷயங்களில் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மருத்துவர் கேட்டுக்கொள்கிறார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…