பல நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவுக்கு வழங்க தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அதன்போது, ஹரின் பெர்ணான்டோவின் கருத்து சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதா என இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர்ஹரின் பெர்னாண்டோ அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்த போது, இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அவர் தெரிவித்தார்.
இது தெரியாமல் கூறப்பட்ட விடயம் அல்ல. தற்போது இலங்கையில் நடைபெறும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்கள் அமைதி காக்கிறார்கள், ஹரிண் பெர்ணான்டோவின் கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.
ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சருக்கு இவ்வாறான கருத்துக்களை மேற்கொள்ள முடியுமா? சிறிலங்கா ரெலிகொம், மின்சார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை இந்தியாவுக்கு வழங்க தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதாகவும் சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறாக இலங்கையின் அனைத்து சொத்துக்களும் வழங்கப்பட்டால் எமக்கு மிகுதியாக என்ன இருக்கும்? இந்த நாடாளுமன்றத்தையும் இந்தியாவுக்கு கொடுங்கள்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது.
எங்கே அந்த ஒப்பந்தம்? இதனை ஆளுங்கட்சி உறுப்பினர்களாக நீங்கள் பார்த்தீர்களா?அமைச்சரவை அமைச்சர்களுக்கு இந்த ஒப்பந்தம் தொடர்பில் தெரியுமா?இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால், இந்திய வர்த்தகர்கள் இலங்கைக்கு சுதந்திரமாக வந்து செல்ல முடியும்” என்றார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…