Categories: Local News

புதிய சிறுவர் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

சிறுவர் உரிமைகள் தொடர்பான இணைந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நல்லாரோக்கியத்தை உறுதிப்படுத்துவதில் சவால்கள் நிலவுகின்றன. குறிப்பாக பிள்ளைகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தல், பிள்ளைகளைப் பல்வேறு துஷ்பிரயோகச் செயல்களில் ஈடுபடுத்தல் போன்ற அவர்களின் உரிமைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் இலங்கைப் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தற்போது காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக சர்வதேச சிறுவர் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்ற வகையில் இணைந்த சட்டமொன்றைத் தயாரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

“எதிர்வரும் 25 ஆண்டுகள்” எனும் பெயரிலான 2023.01.09 திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் “சிறுவர் பாதுகாப்பு சட்டம்” எனும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சிறுவர் உரிமைகள் தொடர்பான இணைந்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago