நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நடனம், இசை, நாடகம் மற்றும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்தப் பாடங்களுக்கான பாடசாலை விண்ணப்பதாரிகளின் நுழைவுச் சீட்டுகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் நுழைவுச் சீட்டுகள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.இது தவிர பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்துக்குச் சென்று அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டின் முதற்கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் கடந்த 31ஆம் திகதி ஆரம்பமாகியது.
கடந்த ஜனவரியில் நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சைக்கு 346, 976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…