புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சீருடை விநியோகம்
இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் செய்யும் பணி என்பன எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பணிகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் 2024ஆம் கல்வி ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் நாளையதினம்(19) ஆரம்பிக்கப்படவுள்ளன.
2023ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன்(16) நிறைவடைந்த நிலையில், நாளை முதல் புதிய கல்வி ஆண்டிற்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…