Categories: Local News

தொடரும் அதிரடி சுற்றிவளைப்பு; நேற்றிரவும் பலர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (15) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களும் அடங்கியுள்ளனர்

இந்த சுற்றிவளைப்பில் 241 கிராம் 913 மில்லி கிராம் ஹெராயின், 139 கிராம் 892 மில்லி கிராம் ஐஸ்,1 கிலோ 744 கிராம் கஞ்சா, 27,780 கஞ்சா செடிகள், மாவா 10 கிராம், 1521 போதை மாத்திரைகள், 73 கிராம் மதன மோதகம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேக நபர்களில் 16 சந்தேக நபர்கள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளவர்களாகும்.

மேலும், ஒருவர் தடுப்புக் காவல் உத்தரவிற்கு அமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 03 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களில் 06 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணையும், 102 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆகும்.

அதேநேரம் குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்களும் இதில் அடங்கியுள்ளனர்.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago