நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம், அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இந்த சட்டத்தின் கீழ் கைதானதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாணந்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த சட்டத்தில் கைதான முதல் நபர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல்வாதி ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏனைய அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த நபர் சேறு பூசி வந்தார் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு பிரிவினர் எவரையும் இதுவரையில் கைது செய்யவில்லை என நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…