Categories: Local News

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கை பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி சமர்ப்பித்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று(08) ஆரம்பமாகிறது.

ஒத்திவைப்பு வேளை விவாதமாக இது இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, இன்றைய(08) பாராளுமன்ற சபை அமர்வு காலை 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது என்பது விசேட அம்சமாகும்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை அல்லது அக்ராசன உரை தொடர்பான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டை கட்டியெழுப்பும் கனவை நனவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று(08) அழைப்பு விடுத்திருந்தார்.

அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளைக் விடவும் மாற்றீடான சிறந்த கொள்கைகள் இருப்பின் அவற்றை ஆழமாக பரிசீலிக்கத் தயாரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி நேற்றைய கொள்கை பிரகடன உரையில் விளக்கமளித்தார்.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை முன்வைத்து ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்ற ஆரம்பித்தவுடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வௌிநடப்பு செய்திருந்தனர்.

Mohamed Nashan

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago