இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேலை (Bhupendrabhai Patel) இன்று சந்தித்துள்ளனர்.
குஜராத்தின் சட்டசபை கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதற்கான அபிவிருத்தி மூலோபாய திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தின் நிர்வாக செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டுள்ள, குஜராத் மாதிரி திட்டத்தை இதன்போது முன்வைத்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி மறுசீரமைப்பு, விவசாயம் மற்றும் நீர், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் முதலீடு, சுகாதார பாதுகாப்பு மற்றும் மகளிரை வலுப்படுத்துதல் ஆகியன குஜராத் மாதிரி திட்டத்தின் பிரதான அம்சங்களாகும்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கிணங்க இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…