Categories: Local News

மரத்தின் கிளை விழுந்து மற்றுமொரு சிறுவன் பலி!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூட்டன் தோட்டப் பகுதியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நியூட்டன் தோட்டம், டிக்கோயா பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் தோட்டத்தின் நடுவில் நடந்து சென்றபோது, ​​தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள மரத்தை சிலர் வெட்டியுள்ளனர்.

வெட்டப்பட்ட மரம் மற்றுமொரு மரத்துடன் மோதியதில் அந்த மரத்தின் கிளை முறிந்து சிறுவன் மீது விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மரத்தை வெட்டிய 5 சந்தேக நபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்த நிலையில், சந்தேகநபர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று (05) கம்பளை சர்வதேச பாடசாலைக்கு அருகாமையில் மரம் ஒன்று விழுந்ததில் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு சிறுவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago