72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை நாளைய தினமும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில், இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள 22 வைத்தியசாலைகளில், 600க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்தது.
இந்தநிலையில். குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
இது தொடர்பில், அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
எவ்வாறாயினும், அனைத்து சிறுவர், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளின் சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…