Categories: Local News

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு!

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மருத்துவர்கள் தவிர்ந்த சுகாதாரத் துறையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை ரூ. 35,000 இலிருந்து ரூ. 70,000 ஆயிரமாக ரூ. 35,000 இனால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குறித்த கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

சுகாதாரத் துறையில் தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்புக்கு பதில் நடவடிக்கையாக இலங்கை இராணுவம் இன்று (01) நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு தமது படைகளை அனுப்பியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் வழிகாட்டலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அந்தந்த வைத்தியசாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கொழும்பு பொது வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, பல் வைத்தியசாலை கொழும்பு, ஹோமாகம ஆதார வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, மீரிகம ஆதார வைத்தியசாலை, அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலை, குருணாகல் போதனா வைத்தியசாலை, மாரவில ஆதார வைத்தியசாலை, தங்கொடுவ ஆதார வைத்தியசாலை, அங்கொடை வைத்தியசாலை, IDH அங்கொடை, அங்கொடை கிழக்கு வைத்தியசாலை, அத்துருகிரிய ஆதார வைத்தியசாலை, நவகமுவ ஆதார வைத்தியசாலை, நெவில் பெனாண்டோ வைத்தியசாலை, பண்டாரகம ஆதார வைத்தியசாலை, பலாங்கொட ஆதார வைத்தியசாலை, எஹலியகொட ஆதார வைத்தியசாலை, கேகாலை போதனா வைத்தியசாலை, மாத்தறை போதனா வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, உடுகம ஆதார வைத்தியசாலை, மொணராகலை பொது வைத்தியசாலை, அம்பாந்தோட்டை வைத்தியசாலை, தெபரவெவ ஆதார வைத்தியசாலை, தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இராணுத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உரிய பாதுகாப்பு படைத் தளபதிகளின் கண்காணிப்பின் கீழ் பல்வேறு மருத்துவமனைகளில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது முக்கியமான ஆதரவை வழங்குவதையும், சுகாதார சேவைகளின் தடையற்ற செயற்பாட்டை பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் அவசரநிலைகள் ஏற்பட்டால் விரைவாக செயற்படுவதற்காக இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக, இராணுவ ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago