Categories: Local News

மக்களை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே! அமைச்சர் மனுஷ புகழாராம்

நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவே என அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமே இதுவென அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று அனுராதபுரத்தில் ஆரம்பமான நிலையில் அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முந்தைய நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும் என நான் நம்புகின்றேன். இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியடைந்த போது அனைவரும் பின்வாங்கியிருந்தனர். நாட்டை மீட்டு எடுக்கமுடியாது என தெரிவித்தனர். இந்த நாடு இன்று இருக்கும் நிலைக்கு வந்திருப்பது ஒரு அதிசயம். அனைவரும் முடியாது என தெரிவித்த சந்தர்ப்பத்தில் தற்போதைய ஜனாதிபதி நாட்டைக் கைப்பற்றினார். அவர் ஒரு தலைசிறந்த தலைவர். ரணில் விக்கிரமசிங்க கொள்கை இல்லாத, ஆனால் தீர்க்கமான முடிவுகளைக் கொண்ட தலைவர். நாட்டை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என அனைவரும் கூறினர். ஆனால் மக்களைக் காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு இப்போது உள்ளது. மக்களை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்று நான் கூறுகிறேன் என அமைச்சர் மனுஷ நாணாயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago