மருத்துவ சங்கங்கள் நீங்கலாக குறைந்தது 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் நாளை (01) காலை 6.30 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
DAT கொடுப்பனவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதிலும், அண்மையில் உத்தியோகபூர்வ வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர், தாம் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை என சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், 72 இற்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாளை ஆரம்பிக்கப்படவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை என அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதாரத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் அகில இலங்கை தாதியர் சங்க உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…