அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை திருத்தங்களுடன் உள்ளடக்கி நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ளவர்கள் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் செல்லுபடிக் காலத்தை ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சமூகப் பிரிவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ள பிரிவு போன்ற இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து 80,000 குடும்பங்களுக்காக ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்கப்படும் 5,000 ரூபாய் தொகையை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை செலுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பங்கள் கோரலை 2024 முதலாம் காலாண்டில் ஆரம்பித்து 2024 ஜூன் மாதத்தில் நிறைவு செய்து ஜீலை மாதம் தொடக்கம் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம், அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500 ரூபாயும் இயலாமையுள்ள நபர்களுக்கு 7,500 ரூபாயும் முதியோர்களுக்கு 3,000 ரூபாயும் 2024 ஏப்ரல் மாதம் முதல் மாதாந்தக் கொடுப்பனவாக செலுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…