Categories: Local News

மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லாத மாணவி எடுத்த தவறான முடிவு

பதுளை, புவக்கொடமுல்லை பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லா காரணத்தினால் மனமுடைந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பதுளையில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, கணிதப் பாடத்திற்காக மேலதிக வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டுள்ளார்.

எனினும் அவரது குடும்பத்தின் வறுமை காரணமாக அதற்கு பணம் திரட்டிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மனமுடைந்து போன மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஆயிஷாவின் உறவினர்:

“.. டீச்சர் சொல்லியிருக்காங்க, நீங்க நல்லா படிக்கிறீங்க கணிதப் பாடத்திற்கு க்ளாஸ் போங்கன்னு.. க்ளாஸ் அனுப்பவும் காசு வேணுமே.. காசு இல்லாதது தான் பிரச்சினையே.. டீச்சர்கள் இப்படிக் கூறும் போது. அவருக்கு க்ளாஸில் இருக்க முடியல்லையாம், அவள் மனமுடைந்து க்ளாஸில் தனியாக ஒதுக்கப்பட்ட ஆளாக தான் இருந்திருக்கிறாள்.. ”
கடந்த நாட்களில் தனக்கு கணிதப் பாடத்திற்கு மேலதிக வகுப்பிற்கு செல்ல வேண்டும் என ஆயிஷா தனது பெற்றோர்களுக்கு தெரிவித்திருக்கிறாள்.

ஆயிஷாவின் தாய்:

“.. கணிதத்திற்கு க்ளாஸ் போகணும்னு சொன்னா, ஆனால் இப்போ தின்னுறதுக்கே வழியில்ல, க்ளாஸ்க்கு காசு இல்லன்னு சொன்னன்..”
தாயின் இந்த வார்த்தைகளை கேட்ட ஆயிஷாவின் அடுத்த கட்ட நடவடிக்கை தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக மாறியது.. அதற்காக மலசலகூடத்திற்கு சென்று அவரது பாட்டிக்கு கொடுக்கும் சில மருந்துகளை குடித்துள்ளதை அடுத்து அவர் அவசரமாக பதுளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அவரது உயிரைக் காப்பாற்ற வைத்தியர்களால் முடியவில்லை.

ஆயிஷாவின் தாய்:

“.. எனக்கு நான்கு பிள்ளைகள்.. நான் மகள் இப்படி க்ளாஸ் போகணும்னு சொல்றா என்று கூற, எனக்கும் வீட்டுக்காரருக்கும் இடையே சிறு வாக்குவாதம் நடந்தது.. அதில் கணவர் என்னை விட்டுச் போறதா சொன்னாரு.. அதற்குப் பின்னர் மகளுக்கு சரியான கவலை.. தந்தை போனா எப்படி நாம சாப்பிட்றது என்ன செய்வதுன்னு.. அப்படியே மகள் பாண் சாப்பிட்டிட்டு எழுந்து டொய்லட் போனவ தான்…”

நீங்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளீர்களா?
அழையுங்கள் – 1926, 1333, 070 7308308

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago