Categories: Local News

கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி கொழும்பில்…

கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாகாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் அண்மையில் கொழும்பு 7 ஜெட்வின் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையில் உள்ள கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பு ஆகியன ஒன்றிணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

கொமன்வெல்த் ஐகொனிக் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிசாம் மற்றும் சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர் வர்த்தக போரத்தின் ஆளுநர் கலாநிதி சிந்தியா சாங் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்வில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இங்கு கருத்து தெரிவித்த சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் எமது அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பாரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம்.

இதனூடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தவும் முடியும்.

திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாகவே நாட்டின் பொருளாதார துரித வளர்ச்சியடையும் என்பதுடன் இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தகர்கள் போட்டி சந்தைக்கு முகம் கொடுக்க கூடியதாகவும் இருக்கும் என்றார்.

இந்நிகழ்வுக்கு இலங்கையின் சகல பிரதேசங்களில் இருந்தும் வருகை தந்திருந்ததுடன் சிறுமுயற்சியாளர்கள் தங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகம் செய்தமை விசேட அம்சமாகும்.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago