அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.
“அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் அரசாங்கம் வழங்கியுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு. ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய மீதி ரூ.5,000 கொடுப்பனவு எமக்கு போதாது. உழைக்கும் மக்கள் குறைந்தபட்சம் 20,000 ரூபாய் கொடுப்பனவு உயர்வுக்காகவே போராடினார்கள். எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் அரச மற்றும் மாகாண தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடுகின்றன. தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு நியாயமான சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஹோட்டல் தொழிலை பராமரிப்பது சிரமமாக உள்ளதாக ஹோட்டல் பணியாளர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமது தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அதன் தேசிய அமைப்பாளர் ஜயதிலக்க ரணசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…