Categories: Local News

பொதுமக்களுக்கு பொலிஸார் வழங்கும் பரிசு!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பில் தகவல் தருவோருக்கு பண வெகுமதிகள் வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நாடு தழுவிய ‘யுக்திய’ நடவடிக்கைக்கு இணங்க பணச் சலுகைகளை அறிமுகப்படுத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள், பிரதிப் காவல்துறை மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, தானியங்கி துப்பாக்கிகளுடன் (T56, AK47, M16, SAR 80, T81) சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய உதவினால் 250,000 ரூபாய் வழங்கப்படும்.

சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தானியங்கி துப்பாக்கியை (T56, AK47, M16, SAR 80, T81) மீட்டெடுப்பதற்கு வழிவகுக்கும் தகவலுக்கு 250,000 ரூபாய் வழங்கப்படும்.

அரை தானியங்கி துப்பாக்கிகளை (பிஸ்டல்கள், 84 எஸ்எல்ஆர், ஒட்டோ-லோடிங் சொட்கன்கள்) மீட்டெடுக்க 250,000 ரூபாய் வழங்கப்படும்.

ரிவோல்வர் ரக துப்பாக்கியை வைத்திருக்கும் சந்தேக நபரை கைது செய்ய 150,000 ரூபாய் வழங்கப்படும்.

சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ரிவால்வரை மீட்டெடுப்பதற்கு 100,000 ரூபாய் வழங்கப்படும்.

ரிப்பீட்டர் ரக துப்பாக்கியை மீட்டெடுப்பதற்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகளுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும்.

சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து கைக்குண்டொன்றை மீட்டெடுப்பதற்கு 25000 ரூபாயும், சந்தேகத்திற்கு இடமின்றி அதனை மீட்பதற்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மீட்டெடுப்பது குறித்த தகவல்களுக்கு 15,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago