Categories: Local News

தேசிய கொடியை ஏற்றுங்கள்…! அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை…!வெளியான காரணம்…!

இலங்கையில் 76வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை விசேட நிகழ்வாக கருதுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு நிறுவனங்கள் மற்றும் கட்டடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் அரச நிறுவனங்களின் கட்டிடங்களை மின்சாரத்தால் அலங்கரிக்குமாறு பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, மின் விளக்குகளை சரியான முறையில் எரியச் செய்ய வேண்டும் என்றும், அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுதந்திர தின விழாவையொட்டி பிப்ரவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Muhamed Hasil

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

7 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

7 months ago