போதைப்பொருட்களை பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள். பாதாள குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொலிஸ் சேவையில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் உட்பட கீழ்மட்ட அதிகாரிகள் போதைப்பொருள் பாவிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது வைத்திய பரிசோதனை அறிக்கை கோரப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகள் ஒருமாத காலத்துக்குள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள்.
போதைப்பொருள் சுற்றிவளைப்பு தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் 4,292 பேரில் இதுவரை 1,973 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை வெற்றிப்பெற்றுள்ளன.
இந்த சுற்றிவளைப்பின் போது எவரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்படவில்லை. தடுப்பு காவலில் வைக்கவுமில்லை. நீதவானின் அனுமதியுடன் தான் தடுப்பு காவல் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட 40,590 பேரில் சுமார் 5,000 பேர் மாத்திரமே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…